Thursday, September 12, 2013

காதல் அனுபவம்!



காதலில் விழுவதென்பது,அண்ணாசாலை எல்.ஐ.சி.கட்டிடத்திருந்து குதிப்பதைப் போன்றது!
மூளை சொல்கிறது,இது ஆபத்தானது என்று.
இதயம் சொல்கிறது,உன்னால் பறக்க முடியும் என்று!
...........................................
காதல் என்பது எல்லோரும் பேசும் மொழி;ஆனால் அதை இதயத்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்!
.....................................................................
தயக்கத்தில் தொடங்கி,வருத்தத்தில் முடிந்தாலும் இடைப்பட்ட காலம் எவ்வளவு இனிமை யானது?!
.......................................
காதல் ஒரு வலி என்று சொல்வர் பலர்
ஆனால் தனிமை ஒரு வலி
புறக்கணிப்பு ஒரு வலி
இழப்பு ஒரு வலி
ஆனால் இவ்வலிகளுக்கெல்லாம் மருந்து காதலன்றோ?!
.........................................................
வயது என்பது காதலிலிருந்து காப்பதில்லை;ஆனால் காதல் என்பது சிறிதாவது வயதாவ திலிருந்து காக்கத்தான் செய்கிறது!
.............................................................
காதல் என்பது எப்போதும் சிறிது பைத்தியக்காரத்தனம் கலந்தே இருக்கிறது.ஆனால் அந்தப் பைத்தியக்காரத்தனத்திலும் ஒரு தெளிவு  கலந்திருக்கிறது !

.....................................................

கண்களால் காண முடியாத எதையோ இதயம் கண்டு விடுகிறது; உண்மைக் காதல் பிறக்கிறது!

.......................................................

ஆழ்ந்து காதலிக்கப்படுவது, சக்தியைக் கொடுக்கிறது;ஆழ்ந்து காதலிப்பது,துணிச்சலைக் கொடுக்கிறது.

........................................................
ஆதலினால் காதல் செய்வீர் ஜகத்தீரே!
 


18 comments:

  1. காதல் நல்லதுதான்! சரியான வயதும், சரியான நபரை தேர்ந்தெடுக்கும் பக்குவமும் இருந்தால்!!

    ReplyDelete
    Replies
    1. சரியாச் சொன்னீங்க அக்கா!

      Delete
  2. வயது என்பது காதலிலிருந்து காப்பதில்லை;ஆனால் காதல் என்பது சிறிதாவது வயதாவ திலிருந்து காக்கத்தான் செய்கிறது!//

    கரெக்டா சொன்னீங்க :)

    ReplyDelete
  3. நெட்டையனை நம்பினாலும் குட்டையனை நம்பாதே என்பார்கள் ...ஆனால் நான் காதல் விஷயத்தில் குட்டனை நம்புகிறேன் !

    ReplyDelete
    Replies
    1. நம்பினார் கெடுவதில்லை
      நன்றி ஜோக்காளி

      Delete
  4. காதல் மொழிகள் இனித்தது! சிறப்பான தொகுப்பு! நன்றி!

    ReplyDelete
  5. // இவ்வலிகளுக்கெல்லாம் மருந்து காதலன்றோ?!//


    ஆனால் தெய்வப்புலவர் 1102 ஆவது குறளில்

    ‘பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
    தன்நோய்க்குத் தானே மருந்து.’

    என சொல்கிறாரே!

    ReplyDelete
    Replies
    1. காதல் இருந்தால்தானே அது சாத்தியம்!
      நன்றி

      Delete
  6. காதல் என்பது எல்லோரும் பேசும் மொழி;ஆனால் அதை இதயத்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்!
    ........................................................
    .காதலைப் புரிந்து கொள்ள முடிந்தது

    ReplyDelete
    Replies
    1. உங்களால் முடியாததா?
      நன்றி

      Delete
  7. உங்களுக்குள் காதல் வந்து விட்டதோ ?

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கேள்விக்குப் பதில் அடுத்த பதிவு!
      நன்றி சசிகலா

      Delete
  8. வயதின் ஏற்றத்திற்கேற்ப காதலும் ஏற்றம் பெறும்!

    ReplyDelete
    Replies
    1. அய்யா சொன்னாச் சரிதான்!
      நன்றி

      Delete