Friday, April 26, 2013

அவளைத் தழுவும் சுகம்!



அவளைப் பார்க்கிறேன்,ஆசை பெருகுகிறது

அருகில் அவளிருக்கத் தூக்கம் வருமோ!

ஆசையோடு அவளை அள்ளி எடுக்கிறேன்

 மேலாடை நீக்கி என் மடியில் கிடத்துகிறேன்

அவள் வளைவுகளில் என் கைகள்

மெல்லப் படருகின்றன!

என்ன சுகம் என்ன சுகம்!

கைகளும் விரல்களும் போடும் கோலத்தில்

புதிய சுருதி சேர்ந்து

அவள் ஒலியெழுப்புகிறாள் இன்பமாய்

உச்சத்தை நோக்கி.....

காதுகளில் நாத வெள்ளம் நிறைகிறது!

அண்ணா கத்துகிறார்

“பாதி ராத்திரியில் என்னடா

வீணை வாசிப்பு”!!

ரசனையில்லாதவர்!

என்ன செய்ய?நிறுத்தி விட்டேன்!

11 comments:

  1. ஏற்கனவே ஏற்பட்ட அனுபவத்தால், தலைப்பைப் பார்த்து ஏமாறவில்லை. எனக்குத்தெரியும் பதிவின் கடைசியில் ஒரு திருப்பம் கொடுப்பீர்கள் என்று! பதிவை இரசித்தேன்!

    ReplyDelete
  2. //வீணை வாசிப்பு...// ஹா ஹா . பகல் கனவு இல்லை!

    ReplyDelete
    Replies
    1. வீணையும் பெண்ணும் ஒன்றுதான்!வாசிக்கத் தெரிந்தவன் வாசிக்க வேண்டும்!
      நன்றி

      Delete
  3. நல்ல எண்ணம்...!

    வே.நடனசபாபதி ஐயா சொன்னது சரியே...

    ReplyDelete
  4. அருமை! இம்முறை ஏமாறவில்லை!

    ReplyDelete
  5. வீணை என்றாலும் பாவையானாலும் வர்ணனை அருமை.

    ReplyDelete
  6. ellaaraiyumpola naanum emaarala..!

    aanaal nalla irukku..!

    ReplyDelete