Sunday, March 10, 2013

சண்டேன்னா ஒண்ணு!-ஒரு நீதிக்கதை!!



ஒரு காதல் ஜோடி இருந்தார்கள்.ஓராண்டு காதலித்த பின் மணம் புரிந்து கொள்ள முடிவு செய்தனர்.

காதலிக்கு ஒரு தங்கை இருந்தாள் 18 வயது;அழகானவள்.இவன் அருகில் வரும் போதெல்லாம்   மேலாடையை விலக்கி குனிந்து நிமிர்ந்து இவனைப் பார்த்து ஒரு மாதிரியாகச் சிரிப்பாள்.

அவளை நினைக்கும்போது அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

திருமணம் நிச்சயமான பின் ஒரு நாள் அவள் அவனை ஃபோனில் அழைத்தாள், ,அழைப்பி தழ்களைப் பார்க்க வருமாறு.

அவன் சென்ற போது அவள் தனியாக இருந்தாள்.கவர்ச்சிகரமாக உடை அணிந்திருந்தாள்.  அவனைப் பார்த்த பார்வையிலேயே அழைப்பு இருந்தது. அவன் மீது  அவளுக்கு மோகம் என்றுகூறிவிட்டு “நான் மாடியில் என் படுக்கை அறைக்குப் போகிறேன்; வேண்டு மென்றால் மேலே வந்து என்னை….”என்று சொல்லி விட்டு   மேலே சென்றாள்.

அவன் சிறிது நேரம் யோசித்தான்

ஒரு முடிவுக்கு வந்தான்.

வீட்டு வாசலை நோக்கிநடந்தான் ,வெளியே போய் தன் காரை நோக்கிச் சென்றான்

அப்போது அவன் வருங்கால மாமனார் அவன் முன் வந்து அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு கண்ணீர் மல்கக் கூறினார்”நாங்கள் வைத்த பரிட்சையில் தேறி விட்டீர்கள். உங்களை மாதிரி ஒரு கணவன் என் மகளுக்குக் கிடைக்க மாட்டான்”

அவன் திகைத்து நின்றான்.

இக்கதை சொல்லும் நீதி என்ன தெரியுமா?...................
……………………….
……………………….
……………………….
ஆணுறையை எப்போதும் காரிலேயே(பைக்.ஸ்கூட்டர் etc.’) வைத்திருக்கவும்!!

7 comments:

  1. இந்த கதை சொல்லும் நீதி, அநீதி ஆக அல்லவா இருக்கிறது!

    ReplyDelete
  2. புத்தி ஏன் இப்படி போகிறது...? நாடு சீரழிய ஒரு கதை...

    ReplyDelete
  3. ஏன்.... இப்படி எல்லாம்! :(

    ReplyDelete
  4. முன்பு படித்த எஸ்எம்எஸ் ஜோக்... இதற்கு பிராயச்சித்தம் தேடிக்கொண்டீர்களே... நீங்கள் நல்லவரா கெட்டவரா... ஹா ஹா ஹா

    ReplyDelete
  5. என்ன கொடுமை இது ?

    ReplyDelete
  6. நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா?

    ReplyDelete