Wednesday, November 21, 2012

பெண்களைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?!



அழகில்லாத பெண் என்று யாரும் இல்லை!
 .....................
ஒரு ஆண் மகப்பேறு மருத்துவர் என்பவர்,காரே சொந்தமாக வைத்திருக்காத கார் மெகானிக் போன்றவர்!
 ........................
ஒரு ஆண் பிரசங்கத்தில் சொல்வதை விட ஒரு பெண் பெருமூச்சிலேயே அதிகம் சொல்லி விடுகிறாள்.
 ......................
எந்த விவாதத்திலும்  பெண் சொல்வதே கடைசி வார்த்தை;அதற்குப்பின் ஆண் சொல்வதெல்லாம் ஒரு புது விவாதத்தின் தொடக்கமே!
 .....................
பெண்கள் அதிகம் பேசாத ஆண்களை விரும்புகிறார்கள்;இவர்கள் பேசுவ தெல்லாம் அவர்கள் கேட்பார்கள் என்று நம்பி!
 ......................
கடவுள் முதலில் ஆணைத்தான் உருவாக்கினான்,பின்னரே பெண்ணை.ஒரு ஒப்பற்ற பொருளை உருவாக்க ஒரு ஒழுங்கில்லாத மாதிரி செய்து பார்ப்பது போல்!
 ......................
ஒரு சராசரிப்பெண் அறிவை விட அழகையே அதிகம் விரும்புகிறாள்;ஏனெனில் ஒரு சராசரி ஆண் சிந்திப்பதை விடப் பார்ப்பதில் அதிக கவனம் செலுத்து கிறான்.
 .............. ......
ஒரு ஆணின் முகம் சுயசரிதை;ஒரு பெண்ணின் முகம் புதினம்.
 .....................
பெண் என்பவள் இல்லையெனில்  உலகில் பணம் என்பதே பொருளற்றுப் போகும்.
 ..................
பெண் தன் கண்ணீரை நகை போல் அணிந்து கொள்கிறாள்!
 ...................
ஒரு பெண் எப்போது மிக மகிழ்கிறாள்?தன்னை விட குண்டாக இருக்கும்  ஒரு பெண்ணைப் பார்க்கும்போது!
...................

13 comments:


  1. பாவையர் ஆய்வு பல்சுவை!

    ReplyDelete
  2. சொந்தமா யோசிச்சதா......
    என்னமா யோசிக்கீரீங்கப்பா

    ReplyDelete
    Replies
    1. அவ்வளவு அறிவு எனக்கு ஏது?யாரோ அறிஞர்கள் சொன்னதுதான்!
      நன்றி

      Delete
  3. என்னமோ சொல்லிட்டு போங்க...!

    ReplyDelete
  4. நல்ல பகிர்வு குட்டன் ஐயா.

    ReplyDelete
  5. அருமையாக சிந்திக்கிறீர்கள்
    அழகாகவும் சொல்கிறீர்கள்
    மனம் கவர்ந்த சுவாரஸ்யமான வாசகங்கள்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நான் எங்க சிந்திச்சேன்?!
      நன்றி ரமணி சார்

      Delete
  6. அடடா பெண்னின் பார்வையில் சிறப்பான சிந்தை.

    ReplyDelete
  7. சிறப்பாக சொல்லி விட்டீர்கள்... வாழ்த்துக்கள்...

    tm9

    ReplyDelete